யாழில் பிரபல ஆலயம் ஒன்றில் திருடர்கள் கைவரிசை

யாழ் சாவகச்சேரி ஆலயம் ஒன்றினுள் நுழைந்த திருட்டுக் கும்பல் தங்க ஆபரணங்களையும் பணத்தினையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

சாவகச்சேரி காளி கோவிலின் கும்பாபிசேகம் நேற்றைய தினம் நிறைவடைந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் அங்கு நுழைந்த திருட்டு கும்பல் ஒன்று அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஒன்றரைப் பவுண் தங்க ஆபரணங்ளையும் உண்டியலினுள் இருந்த 35000 ரூபா பணத்தினையும் மற்றும் அங்கு இருந்த அரிசி மூட்டைகள் மூன்றையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

அத்தோடு அருகில் இருந்த வாகனம் திருத்தும் நிலையம் ஒன்றினையும் உடைந்து அங்கிருந்த (4.5) லட்சம் ரூபாய் பணத்தினையும் கொள்ளையிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.