யாழில் 75வது சுதந்திர தினத்தை ஆதரித்து கொண்டாடும் முகமாக முன்னெடுக்கப்பட்ட பேரணி !

75வது சுதந்திர தினத்தை ஆதரித்து கொண்டாடும் வகையில் யாழ்ப்பாணத்தில் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் யாழ் சிவில் சமூக நிலையத்தினால் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் பேரணியில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தேசியக் கொடியை ஏந்தியவாறு யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் ஆரம்பித்து யாழ் நகரை வலம் வந்தனர்.

இதன் போது மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் கொடி ஏந்தியவாறு பேரணி முன்னெடுக்கப்பட்டது.