சற்றுமுன் இந்தியாவில் நிலநடுக்கம் பதிவு !

இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று (12) மாலை 4.18 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.