உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தற்போதைக்கு நடத்தப்பட மாட்டாது என வளர்ந்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பசில் ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பசில் இதனைத் தெரிவித்ததாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, தேர்தல் தொடர்பில் தேவையற்ற அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டாம் என பசில் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நிதிப் பிரச்சினையைக் காரணம் காட்டி வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு அரசாங்க அச்சகம் மறுத்துள்ள நிலையில், தபால் மூல வாக்களிப்பையும் தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.