கிளிநொச்சியில் பாரஊர்தி மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி புளியம்பொக்கணை பகுதியில் பார ஊர்தி மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது குறித்த விபத்து இன்று பிற்பகல் நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளது இவ் விபத்தில் வட்டகச்சி பகுதியைச் சேர்ந்த கதிரவேலு யாதவராசா என்ற 58 வயதுடைய 6பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்

புளியம்பொக்கணை பகுதியில் இருந்து கண்டாவளை நோக்கி பயணித்த முதியவர் மீது பரந்தன் பகுதியில் இருந்து நெல் கொள்வனவுக்காக புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த பாரஊர்தி மோதியுள்ளது. இவ் விபத்து  கண்டாவளை வெளிகண்டல் சந்திப்பகுதியில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில்இடம்பெற்றுள்ளது.விபத்து தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்