யாழில் விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட 19 வயது யுவதி

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் 19 வயது யுவதி ஒருவர் வீட்டில் யாரும் இல்லாத வேளை இன்றையதினம் பிற்பகல் தனது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.

உயிரிழந்த யுவதி க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் உயிரிழந்த யுவதியின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஇலங்கை தொடர்பில் மகிழ்வான செய்தியை வெளியிட்ட சர்வதேச நாணயநிதியம்
Next articleபுகார் கொடுக்க சென்ற பெண்ணை கற்பழித்த பொலிஸ் அதிகாரி