கழுத்தறுத்து கொல்லப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாய்!

  கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை வடக்கில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் வீடொன்றின் பின்புறம் இருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவத்தில் ஆயுர்வேத வைத்தியரான    பெண் ஒருவரே  உயிரிழந்துள்ளார்.

பொலிசாருக்கு தகவல்

இன்று (27) காலை வீட்டின் பின்புறம் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் பெண் கிடப்பதைப் பார்த்த நபர் ஒருவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவத்தில் களுத்துறை வடக்கு கெலிடோ வீதியை வசிப்பிடமாகக் கொண்ட விக்கிரமராட்சி பிரேமாவதி என்ற பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் களுத்துறை குற்றத்தடுப்பு ஆய்வுகூட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.