விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு!

வீதி விபத்தில் படுகாயம் அடைந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

ஆணையிறவில் சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற ஹயஸ் வாகனம் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் படுகாயம் அடைந்த பருத்தித்துறை ஹட்லிக்கல்லூரி முன்னாள் மாணவன் இன்று உயிரிழந்துள்ளர்.

வடமராட்சி சாரையடி பகுதியைச் சேர்ந்த 27 வயதான சத்தியமூர்த்தி சத்தியன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.