நெடுந்தீவில் 6 பேர் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் இடம்பெற்ற 6 பேரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அறுவரின் கொலை தொடர்பான வழக்கு இன்றைய தினம் (06.06.2023) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, மூவரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சந்தேகநபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் ஜெ.கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கும் அன்றைய (20.06.2023) தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

4 பெண்களும் 2 ஆண்களும்
கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி அதிகாலை நெடுந்தீவில் 5 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 101 வயது மூதாட்டியும் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் 4 பெண்களும் 2 ஆண்களும் அடங்குகின்றனர்.