கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்ப்பட்டுள்ள புதிய மாற்றம்!

   கட்டுநாயக்க விமான நிலையத்தில் தானியங்கி குடிவரவு கட்டுப்பாட்டு அமைப்பை நிறுவ, சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

 தானியங்கி குடிவரவு செக்-இன் 

அதன்படி, ஆரம்ப கட்டத்தில், புறப்பாட்டு முனையத்தில் இரண்டு தானியங்கி குடிவரவு செக்-இன் கவுண்டர்கள் நிறுவவும், 8 மாதங்களின் பின்னர் வருகை முனையத்திலும் இரண்டு கவுண்டர்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை குடிவரவுத் துறையும், விமான நிலைய மற்றும் ஏவியேஷன் செர்வீசஸ் நிறுவனமும் நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கவுள்ளன .

அதேவேளை சிங்கப்பூர் நிறுவனமான தேல்ஸ் டிஸ் தயாரித்த உபகரணங்களோடு இந்த வகையான தானியங்கி குடியேற்றக் கட்டுப்பாட்டு அமைப்புகள் உலகின் பல விமான நிலையங்களில் செயல்படுத்தப்படுகின்றன.