தகாத உறவால் மனைவியை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள்

மனைவியைத் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் கான்ஸ்டபிளை இரண்டு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்க நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (15) உத்தரவிட்டது. 

பொலிஸ் கான்ஸ்டபிளின் திருமணத்துக்கு புறம்பான உறவு தொடர்பில் வினவியபோதே மனைவி தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 12 ஆம் திகதி தாக்குதலுக்குள்ளான மனைவி நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.