அரச வாகனம் மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயம்!

திருகோணமலை-   மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பகுதியில் வைத்து முச்சக்கர வண்டியும் -நீர்ப்பாசனத் திணைக்கள வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார்.

இந்நிலையில் ஆபத்தான நிலையில் சாரதி மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று திங்கட்கிழமை (26) இடம்பெற்ற இவ்விபத்தில் தோப்பூர் -பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியே படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.