லாப் எரிவாயு விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டாலும் சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என லாப் எரிவாயு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நலிந்த குருகுலசூரிய தெரிவித்துள்ளார்.

களஞ்சியங்களில் ஒரு மாதத்திற்கு போதுமான எரிவாயு சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விலை திருத்தம்
மேலும் கூறுகையில்,“எதிர்காலத்தில் விலை திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதை செய்து வாடிக்கையாளருக்கு பலன் அளிக்கப்படும்.

இதேவேளை வரவிருக்கும் பங்குகள் மற்றும் டொலரின் பெறுமதியின் அடிப்படையில் இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்படும்.” என தெரிவித்துள்ளார்.