யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சனிக்கிழமை (1) வருகை தந்துள்ளார்.

இதன்போது மைத்திரிபால சிறிசேனவை வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் T. சத்தியமூர்த்தி வரவேற்றார்.

தொடர்ந்து, வைத்தியசாலை செயற்பாடுகளையும் விடுதிகளையும் பார்வையிட்ட முன்னாள் ஜனாதிபதி நோயாளர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களோடு கலந்துரையாடினார்.

சுகாதார அமைச்சராக தான் பதவியேற்ற காலத்தில் அடிக்கல் நடப்பட்டு ஜனாதிபதி காலத்தில் திறந்துவைக்கப்பட்ட வைத்தியசாலை கட்டட தொகுதியையும் பார்வையிட்டார்.

அவ்வேளை இன்று சனிக்கிழமை காலை வேளையில் பிறந்த ஆண்குழந்தையொன்றை மைத்திரி ஆசீர்வதித்தமையும் குறிப்பிடத்தக்கது.