மதுபான நிறுவனங்களுக்கான அறிவிப்பு!

நாட்டில் இதுவரை வரி செலுத்தாத மதுபான நிறுவனங்களுக்கு வரி செலுத்துமாறு கோரி கலால் திணைக்களம் 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கலால் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற நிகழ்வொன்றின் கலந்துக்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.