வடக்குக்கு 24 புதிய பேருந்துகள் கையளிப்பு!

    இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் 24 புதிய பேருந்துகள் இலங்கை போக்குவரத்து சபைக்கு கையளிக்கப்பட்டுள்ளன .

யாழ். பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் போதே குறித்த பேருந்துகள் கையளிக்கப்பட்டுள்ளன .

இதன்போது, 04 பேரூந்துகள் வவுனியாவிற்கும், 4 பேரூந்துகள் கிளிநொச்சிக்கும், 4 பேரூந்துகள் மன்னாருக்கும் ,3 பேரூந்துகள் முல்லைத்தீவிற்கும், 3 பேரூந்துகள் யாழ்ப்பாணத்திற்கும், 4 பேரூந்துகள் பருத்தித்துறைக்கும், 3 பேரூந்துகள் காரைநகருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.