நபர் ஒருவர் பொல்லால் தாக்கி கொலை!

தங்காலையில் நபர் ஒருவர் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

தங்காலை, கல்பொக்க பகுதியில் நேற்றிரவு இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதையடுத்து ஏற்பட்ட தகராறில் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நபர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

உயிரிழந்த நபர்

கொடெல்லவெல பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தடை செய்யப்பட்ட பிரமிரட் முதலீட்டு வர்த்தகத்துக்காக கொடுத்த 20 இலட்சம் ரூபாயை திருப்பி கேட்பதற்காக சந்தேகநபரின் வீட்டுக்கு அந் நபர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போதே இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் நீதவான் விசாரணைகளுக்காக தங்காலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

அவரை கைது செய்ய தங்காலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.