போதைக்கு அடிமையான யாழ் இளைஞன் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைப்பு!

போதைக்கு அடிமையான யாழ்ப்பாணம் மானிப்பாய் இளைஞனை கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்புமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை (19) மானிப்பாய் பகுதியில் போதைப்பொருளுடன் கைதான 22 வயதான மானிப்பாய் பகுதி இளைஞனை பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (20) முற்படுத்தியிருந்தனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளில் இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என கண்டறியப்பட்டதை அடுத்து இளைஞனை பொலன்னறுவை கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்புமாறு மல்லாகம் நீ நீதிமன்று உத்தரவிட்டது.