காணாமல் போன யுவதி தொடர்பில் பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை!

நீர்கொழும்பு, லியனகேமுல்ல பிரதேசத்தில் 17 வயதுடைய யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு, யுவதியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

யுவதி காணாமல்போனமை தொடர்பில் யுவதியின் தந்தையினால் நீர்கொழும்பு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடன் தகவல் தரவும்

காயத்திரி தேவ்ஷானி சூரியசிங்க என்ற யுவதியே காணாமல் போயுள்ளார் எனவும், இவர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே, இவர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி  தகவல் தெரிந்தவர்கள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நீர்கொழும்பு பொலிஸ் – 071-8 591 630 நீர்கொழும்பு பொலிஸ் – 031- 2 222 227  தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.