கொழும்பு நகர மண்டபத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு

கொழும்பு நகர மண்டபத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர மண்டபத்தை சூழவுள்ள கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று (11) பிற்பகல் முன்னெடுக்கப்படவுள்ளமையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினரைப் பயன்படுத்தி அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.