மின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழப்பு!

மிஹிந்தலை பகுதியில் மின்னல் தாக்கி மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இச் சம்பவம் நேற்றைய தினம் (11-08-2023) மாலை இடம்பெற்றுள்ளது.

மிஹிந்தலை, தம்மன்னாவ வெவையில் மீன்பிடிக்கச் சென்ற 7 பேர் கொண்ட குழுவில் மூன்று பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மின்னல் தாக்கி உயிரிழந்த 40 வயது மதிக்கத்தக்கவர்களின் சடலங்கள் தம்மன்னாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.