மாணவியை உத்தியேகபூர்வ இல்லத்திற்கு அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற ஆசிரியர் கைது!

பொகவந்தலாவையில் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவியை தன்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கு அழைத்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மாணவியை அழைத்த ஆசிரியர்

பாடசாலை முடிந்தவுடன் தன்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கு வருமாறு செவ்வாய்க்கிழமை (15) மாணவியை அழைத்துள்ளார்.

அவ்வாறே மாணவியும் சென்ற போதே ஆசிரியர் அம்மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வைத்திய பரிசோதனைக்காக மாணவி, பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.