காணி ஒன்றில் சடலம் மீட்பு!

மஹாஓயா தம்பதெனிய பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபரொருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹாஓயா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது அப் பகுதியிலுள்ள காணி ஒன்றில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மரணம் தொடர்பான விசாரணைகளை மஹாஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.