யாழில் 2,50,000 ரூபாவிற்கு மாம்பழம் கொள்வனவு செய்த பெண்

யாழில் ஆலய வருடாந்த உற்சவத்தின் போது பெண் ஒருவர் 2,50,000 ரூபாவிற்கு மாம்பழம் ஒன்றை ஏலத்தில் கொள்வனவு செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் நாகர்கோவில் முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் போதே அவர் அம் மாம்பழத்தை கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுளுக்குப் படைக்கும் மாம்பழங்களை உண்பதற்காக அல்லாமல் மாம்பழத்தை வெள்ளைத் துணியில் சுற்றி வீட்டின் முன் கதவுக்கு மேலே தொங்கவிடுவதாக தெரியவந்துள்ளது.

இதன்மூலம் வீட்டிற்கு செழிப்பு வரும் என்ற நம்பிக்கையில் மக்கள் கொள்வனவு செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் வவுனியாவிலுள்ள இரண்டு ஆலயங்களில் நடைபெற்ற இவ்வாறான 2 ஏலங்களில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் மற்றும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாவிற்கு பக்தர்களால் கொள்வனவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஅரிசி தடுப்பாடு தொடர்பில் சோதனை!
Next articleபேசிக் கொண்டிருந்த நடிகர் மாரிமுத்து காலமனார்!