வாகன விபத்தில் இருவர் படுகாயம்!

நுவரெலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டமையால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

சம்பவத்தில் உந்துருளியில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நுவரெலியா காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.