கொழும்பின் பல பகுதிகளில் இராணுவத்தினர் குவிப்பு!

பயணிகளின் பாதுகாப்பிற்காக கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேவைப்பட்டால் ஏனைய ரயில் நிலையங்களுக்கும் இராணுவத்தினர் அனுப்பப்படுவார்கள் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று ஆரம்பிக்கப்பட்ட ரயில் பணிப்புறக்கணிப்பு காரணமாக ரயில் நிலையங்களில் பல்வேறு சிக்கல் நிலைகள் ஏற்பட்டன.

ரயில் நிலையங்களில் முறுகல்
ஹொரபே ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ரயில் செலுத்துனருக்கும் பயணிகளுக்கும் இடையில் வாக்குவாதங்கள் ஏற்பட்டன.

ரயில் தாமதமாக வருவதால் ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொள்வதால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை கட்டுப்படுத்த இராணுவத்தினரை களமிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.