12 மணித்தியால நீர் வெட்டு!

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இன்று (23) மாலை 06.00 மணி முதல் 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அம்பத்தலே நீர் விநியோகம் தொடர்பான திட்டம் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படுவதாக சபை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு குறித்த காலப்பகுதியில் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

இன்று மாலை 06.00 மணி முதல் நாளை காலை 06.00 மணி வரை நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.