பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட இருக்கும் புதிய வேலைத்திட்டம்

எதிர்வரும் அக்டோபர் மாதம் பாடசாலைகளில் புதிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அதன்படி அக்டோபர் மாதம் பாடசாலை சுகாதார மேம்பாட்டு மாதமாக பெயரிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

கொழும்பில் நேற்றைய தினம் (26.09.2023) இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

வாரத்திற்கு ஒரு கருப்பொருள்

மேலும், அடுத்த மாதம் 2ஆம் திகதி முதல் அக்டோபர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வாரத்திற்கு ஒரு கருப்பொருளை தெரிவு செய்து பாடசாலைகளில் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.