பொலிஸாரை தாக்கிய பெண் உட்பட மூவர் கைது!

ரம்புக்கனை திஸ்மல்பொல பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாரம்பெத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த ஒருவரை கைது செய்யச் சென்ற போது, ​​சந்தேக நபர்கள் குறித்த அதிகாரிகளை தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த அதிகாரிகள் இருவரும் ரம்புக்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கேகாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உட்பட மூவர் ரம்புக்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.