நீர்கொழும்பில் பாடகி பாலியல் பலாத்காரம்

  நீர்கொழும்பு பிரதேசத்தில் பிரபல இசை குழு ஒன்றில் பாடகியாக உள்ள இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் அதே இசை குழுவின் கலைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் ஜா எல துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது கிட்டார் கலைஞர் ஆவார். பாதிக்கப்பட்ட 28 வயதான இளம்பெண் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் கிட்டார் கலைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஸ்ஸிற்குள் பாலியல் பலாத்காரம்

முறைப்பாட்டில் சந்தேக நபர் தனது இசைக்குழுவின் பயண பஸ்ஸிற்குள் வைத்து உடல் ரீதியாகவும் வாய்மொழியாகவும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, சந்தேக நபர் சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸ் பணியக அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைதான , சந்தேக நபர் வெலிசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.