இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் திமோர் தீவில் இன்று (02) காலை  6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், சில கட்டிடங்கள் மற்றும் வீடுகள் சிறிதளவில் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

நிலநடுக்கம் சுமார் 22.4 மைல் தொலைவில் நிலத்திற்கு அடியில் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் பீதியடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.