கிணற்றில் தவறி வீழ்ந்தநபர் உயிரிழப்பு!

பொலன்னறுவை பிரதேசத்தில் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள பொது கிணற்றில் தவறி வீழ்ந்ததனால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் தொடர்பான தகவல் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

உயிரிழந்தவரின் சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.