நிறைவேறிய ஊழல் எதிர்ப்பு திருத்த சட்டமூலம்

ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் கடந்த ஜூலை 19 ஆம் திகதி பாராளுமன்றக் குழு நிலை விவாதத்தின் போது நிறைவேற்றப்பட்டது.

அதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பதுடன் இந்த சட்டமூலம் ஜூலை 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது என்ற காரணத்தினால் பின்னர் அது திரும்பப் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.