கஞ்சாவுடன் கைதான இளைஞன் கிளிநொச்சியில் நிகழ்ந்த சம்பவம்!

கஞ்சாவுடன் பயணித்த இளைஞன் ஒருவனை ஆனையிறவு வீதி சோதனை  நிலையத்தில் வைத்து இராணுவ புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

கிளிநொச்சி ஆனையிறவு வீதி சோதனைச்சாவடியில் நேற்று வியாழக்கிழமை (9) மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உடுத்துறை பகுதியில் இருந்து கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் செல்வதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ஆனையிறவு பகுதியில் வைத்து சோதனையிட்ட போது மோட்டார் சைக்கிளுடன்  390 கிராம் நிறையுடைய கஞ்சா போதைபொருளுடன் வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன் மேலதிக விசாரணைகளுக்காக பளை பொலிஸாரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.