எதிர்க்கட்சித் தலைவருக்கு வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி!

ஶ்ரீலங்கா  கிரிக்கெட் நிறுவனத்தினால் சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் மூன்று கடிதங்கள் தொடர்பில் ஆராயவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த மூன்று கடிதங்களையும் தனக்கு அனுப்பி வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

இதன்போது அந்த கடிதங்களை சபையில் சமர்பித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.