துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில்  இடியன் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சட்டவிரோதமாக, பதிவுகளின்றி இடியன் துப்பாக்கி ஒன்றை வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (22) குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொக்குளாய் கிழக்கு பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்ற பொலிசார் வீட்டினை சோதனை செய்த போது பதிவுகள் ஏதுமின்றி சட்டவிரோதமாக துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததன் பேரில் 32 வயதுடைய சந்தேகநபரை கைது செய்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குளாய் பொலிசார் மேற்கொண்டு வருவதுடன், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை இன்றைய தினம்(23) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.