கல்வி அமைச்சின் அறிவிப்பு!

கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பாக மாகாண அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுமாறு அனைத்து கல்விசாரா தொழிற்சங்கங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சர் மற்றும் ஆளுநர்களுக்கு இடையில் நேற்று (24.11.2023) இடம்பெற்ற இணையவழி சந்திப்பின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர், சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள், கல்விசாரா ஊழியர் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியோரின் கலந்துரையாடலைத் தொடர்ந்து, நவம்பர் 24, 2023 க்குள் ஒப்புக்கொள்ளப்பட்ட மாகாண அதிகாரிகளுக்கு தீர்வுகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.