இலங்கைக்கு கடன் வழங்க இணக்கம் தெரிவித்துள்ள நாடுகள்

இலங்கைக்கு கடன் நிவாரணம் வழங்கும் நாடுகளின் குழு தெற்காசிய நாட்டிற்கான கடன் நிவாரணம் மற்றும் திருப்பிச் செலுத்தும் காலக்கெடுவை நீட்டிப்பது தொடர்பான உடன்பாட்டை எட்ட வாய்ப்புள்ளது என்று ஜப்பானின் ஜிஜி நியூஸ் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த குழுவிற்கு பிரான்ஸ் மற்றும் இந்தியாவுடன் இணைந்து ஜப்பான் தலைமை தாங்குகிறது. சீனா இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குனராக உள்ளது.

பல தசாப்தங்களில் மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, கடந்த ஆண்டு முதல் டன் நிவாரணம் வழங்கும் நாடுகளுடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை எட்ட முயற்சித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.