தமிழகத்தில் மீண்டும் அடை மழைக்கு சாத்தியம்

தென்கிழக்கு அரபிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய மாலைத்தீவு பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கன மழை பெய்யக்கூடுமென இந்திய வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.