ஆசிரியரால் விபரீத முடிவெடுத்த மாணவி!

  வவுனியாவில் பாடசாலை மாணவியொருவர், ஆசிரியர் ஒருவரால் தனது உயிரை மாய்க்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா- தரணிக்குளம் பகுதியில் உள்ள பாடசாலை மாணை ஒருவரே விபரீத முடிவுக்கு துணிந்த நிலையில் , உறவினர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மாணவி தொடர்பில் தவறான தகவல்கள் 

பாதிக்கப்பட்ட மாணவி அண்மையில் ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்டிருந்த நிலையில், ஆசிரியருக்கு வலயக்கல்வி அலுவலகத்தினால் இடமாற்றம் அளிக்கப்பட்டது.

அத்துடன் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்றை முன்னெடுக்கும் வண்ணம் குழு ஒன்றையும் நியமித்திருந்தது.

அது தொடர்பில் வலயக்கல்வி அலுவலகத்தால் விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில், நேற்றையதினம் மாணவி தனது வீட்டில் உயிரை மாய்க்க முயற்சி செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவி தொடர்பில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாக தெரிவித்தே அவர் உயிரை மாய்க்க முயற்சி மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் நிலையில் வைத்தியசாலை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.