போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 123,000 பேர் கைது!

இந்த வருடத்தில் இதுவரையில் போதைப்பொருள் குற்றங்களுக்காக கிட்டத்தட்ட 1 இலட்சத்து 23 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.

இந்தக் கைதுகளின் போது 61 கிலோ ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் ஷாக்ய நாணயக்கார தெரிவித்தார்.

போதைப்பொருள் தொடர்பில் இதுவரை 831 பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஷாக்ய நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.