சிறந்த பத்திரிகைக்கான விருதை தனதாக்கிய ‘ தமிழன் ‘

இலங்கை பத்திரிகை பேரவையால் நடத்தப்பட்ட வருடாந்த ஊடக  விருது வழங்கும் விழாவில் , 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த வடிவமைப்பு கொண்ட பத்திரிகையாக ‘ தமிழன் ‘ பத்திரிகை தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கான விருது வழங்கும் நிகழ்வு இன்று கல்கிசை ஹோட்டலில் நடைபெற்றது. 

அதேபோல் 2022 ஆண்டுக்கான சிறந்த விவரணக் கட்டுரைக்கான இணை விருதும் தமிழன் பத்திரிகைக்கு கிடைத்துள்ளது.

தமிழன் பத்திரிகையின் ஊடகவியலாளர் ஏகாம்பரம் ரவிவர்மனுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

இந்த நிகழ்வில் ‘அருண’ மற்றும் ‘The Morning’ நாளிதழ்கள் மற்றும் சக ஊடகவியலாளர்கள் பலரும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.