யுவதி ஒருவரின் சிறுநீரகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட கற்கள் மீட்பு!

  தைவானில் யுவதி ஒருவரின் சிறுநீரகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட கற்கள் அகற்றப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

தைவானில் சியோ பு என்ற 20 வயது இளம்பெண்ணுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து அவரது சிறுநீரகத்தில் இருந்து சுமார் 300 கற்கள் அகற்றப்பட்டுள்ளன.

சியோ பு தண்ணீர் குடிக்கும் பழக்கம் இல்லாதவராக இருந்துள்ளார்.

குறித்த பெண் தாகம் எடுத்தால் கூட தண்ணீருக்கு பதிலாக பபிள் டீ (Bubble Tea) எனப்படும் டீ வகையை மட்டுமே அதிகமாக பருகி வந்துள்ளார்.

அதனால் கழிவுகளை வெளியேற்ற தேவையான நீர்ச்சத்து இல்லாமல் கற்கள் உருவாகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.