இலங்கையில் இரண்டு கொலைகள் பதிவு!

மாரவில, கெடால்கொடவத்தை மற்றும் அக்கரப்பற்று நாவட்காடு ஆகிய இடங்களில் இரண்டு கொலைகள் இடம்பெற்றுள்ளன.

மாரவில கெடால்கொடவத்தை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 34 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் வேறு ஒருவரிடம் அடகு வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் கைத்தொலைபேசியை மீட்கச் சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாகவே இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, அக்கரபத்துவ நாவட்காடு பிரதேசத்தில் மது அருந்திய இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக 39 வயதுடைய நபர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குடிபோதையில் வீட்டுக்கு வந்த மற்றுமொருவர் இறந்தவரின் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்த போது அவ்விடத்திற்கு வந்த இறந்தவருடன் தகராறு செய்துள்ளார்.

இதன் போது குறித்த பெண்ணின் கணவனை வீட்டுக்கு வந்த நபர் தள்ளியுள்ளார்.

கீழே விழுந்த அவரின் தலை வீட்டின் கொன்கிரீட் பகுதியில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொலையை செய்த 20 வயதுடைய இளைஞர் அக்கரப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.