நாளை முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டின் பல பகுதிகளில் நாளை முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதற்கமைய, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் நாளை முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.