குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டில் இந்த நாட்களில் குழந்தைகளிடையே பல வகையான சுவாச நோய்கள் பரவி வருவதாக குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா கூறுகிறார்.

பரிசோதிக்கப்பட்ட குழந்தைகளில், பெரும்பாலானவர்களுக்கு இன்ஃப்ளூவன்ஸா வைரஸ் இருப்பதுடன் இரண்டு கொவிட் -19 தொற்றாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு மேல் சுவாசக் குழாயில் பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன.

குறிப்பாக வைரஸ் காய்ச்சல்கள். இருமல், சளி, வாந்தி, தலைவலி போன்ற அறிகுறிகள் உள்ளதனை அறிந்து கொண்டதாகவும் மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.