75 வயதான சங்கீத ஆசிரியர் வன்புணர்வு சந்தேக நபர் கைது!

  75 வயதான சங்கீத ஆசிரியையை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தி  கொலை செய்தமை  தொடர்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் ,

கொழும்பு, ஹட்ட விஜயராம மாவத்தையில் 75 வயதான சங்கீத ஆசிரியை ஒருவரை வன்புணர்வு செய்து கொலை செய்ய்யப்பட்டிருந்தார்.

தொலைபேசி, மடிக்கணினி, இரண்டு எரிவாயு உருளைகள் திருட்டு

இந்த சம்பவம் தொடர்பில்   ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு குற்றப்பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் திருடிச் சென்ற கையடக்கத் தொலைபேசி, மடிக்கணினி, இரண்டு எரிவாயு உருளைகள் என்பவற்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.