தீவிரமடையும் மின்சார நெருக்கடி!

நாட்டின் தற்போதைய மின்சார நெருக்கடிக்கு முதன்மையாக பாதித்த காரணிகளைக் குறிப்பிட்டு, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைக் குறைப்பது குறித்து துறைசார் கண்காணிப்புக் குழு அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளது.

குறித்த அறிக்கையின் ஊடாக மின்சார நெருக்கடியை சமாளிப்பதற்கான முன்மொழிவுகள் மற்றும் அவதானிப்புகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்துள்ள மின் கட்டணத்தை தொடர்ந்தும் கடைப்பிடிப்பதன் மூலம் நெருக்கடி மேலும் தீவிரமடைந்து வருவதை அவதானிக்க முடிந்ததுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.