5வது முறையாக வங்கதேச பிரதமராகிறார் ஷேக் ஹசீனா!

  வங்கதேசத்தில் நேற்றையதினம் (7) 300 இடங்களில் இடம்பெற்றா பாராளுமன்ற தேர்தலில், 264 இடங்களுக்கான முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 204 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்று 5வது முறையாக வங்கதேச பிரதமராகிறார் ஷேக் ஹசீனா.

வங்க தேசத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில், பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது! தேர்தலில் வங்கதேச தேர்தலில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

5வது முறையாக  பிரதமர்

இதன் மூலம் ஷேக் ஹசீனா 5வது முறையாக வங்கதேச பிரதமராக பதவியேற்க உள்ளார். அதேவேளை தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சி 20 இடங்களை மட்டுமே வென்றுள்ளது.

ஷேக் ஹசினா ஆட்சியில் வங்கதேசம் மற்றும் இந்தியா இடையே பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஷேக் ஹசீனாவின் வெற்றி வங்கதேசம் மற்றும் இந்தியாவுக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.