பல்வேறு கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது!

களுத்துறை பிரதேசத்தில் 20க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய “பூரு லசந்த” 70 இலட்சத்துக்கு அதிக பெறுமதியான தங்க நகைகளுடன் களுத்துறை பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (08.01.2024) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பபெற்ற இரகசிய தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது  களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய நபர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 7 கையடக்கத் தொலைபேசிகள் , கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் சந்தேக நபரின் வீட்டு தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த 25 பவுண் பெறுமதியான தங்க நகைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸாரால் மேற்கொண்டு வருகின்றனர்.